rtjy 229 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

உரிமைக்காக போராடிய தமிழர்களை சிறையிலடைத்தது சிங்கள பேரினவாதம்

Share

உரிமைக்காக போராடிய தமிழர்களை சிறையிலடைத்தது சிங்கள பேரினவாதம்

பயங்கரவாதம் என்ற போர்வைக்குள் உரிமைக்காக போராடிய தமிழர்களை அடக்கியும் கொன்றும் வலிந்து காணாமல் ஆக்கியும் ஆண்டுக் கணக்காக அப்பாவிகளை சிறைகளில் அடைத்தும் வேடிக்கை பார்த்தது சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதம் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்றயதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் அவர் கூறுகையில், 2009 வரை தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய பயங்கரவாத தடைச்சட்டம் 44 ஆண்டுகளை கடக்கும் நேரத்தில் அதன் வடிவத்தை சர்வதேச அழுத்தங்களின் பிரகாரம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயரில் எதிர்ப்புக்கள் மத்தியில் மீண்டும் செப்டம்பர் 15 வர்த்தமானியில் பிரசுரமாகியுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் உள்ளடக்கம் நாட்டில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த இருந்தாலும் உத்தேச பயங்கவாத எதிர்ப்புச் சட்டம் நிறைவேறினால் பெரியளவில் தமிழர்களே பாதிப்பைச் சந்திக்கவுள்ளனர்.

விடுதலைப் போராட்டம் சார்பான நினைவேந்தல்கள் மற்றும் தமிழர்களின் இருப்பை அரச இயந்திரம் அபகரிக்கும் போது அரசாங்கத்தற்கு எதிராக போராடும் மக்களின் ஜனநாயக போராட்டங்கள் புதிய சட்டத்தில் பயங்கரவாதமாக பார்கப்படுகின்றது.

அத்துடன் இதற்கான தண்டனைகளும் மிக கடினமானதாக அமைந்துள்ளன.

இவ்வாறான நிலை எதிர்காலத்தில் ஜனநாயகப் போராட்டங்களை முற்றாக அடக்கும் செயற்பாடாகவே அமையும் அத்துடன் சமூக ஊடகங்கள் பாரிய அளவில் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலை ஏற்பட்டால் அரச அடக்குமுறைகள் உடனுக்குடன் முழுமையாக வெளிவராது தடுக்கப்படும்.

மொத்தத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நிறைவேறினால் தமிழர்களுக்கு மீண்டு ஒரு இனவழிப்புக்கு வழி திறக்கும் தடுத்து நிறுத்த ஒன்றிணைவோம் – என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...