8 14
இலங்கைசெய்திகள்

ஈழத் தமிழரின் வரலாறு தெரியாமல் பிதற்றும் பதுளை எம்.பி : சபா குகதாஸ் விசனம்

Share

ஈழத் தமிழரின் வரலாறு தெரியாமல் பிதற்றும் பதுளை எம்.பி : சபா குகதாஸ் விசனம்

பதுளை (Badulla) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அவரை தெரிவு செய்த மாவட்டத்தில் மக்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்ற போது அவற்றை கருத்தில் கொள்ளாது வடக்கு கிழக்கு ஈழத் தமிழரின் வாழ்விட வரலாறு தெரியாமல் ஆளும் கட்சிக்கு சாமரை வீசுவதற்காக முந்திரிக் கொட்டை போல பிதற்றியுள்ளார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், செல்வராஜ் வடக்கு கிழக்கு இணைப்பு தமிழ் பேரினவாதத்தின் சிந்தனை எனவும் இணைந்த வடகிழக்கு உள்ளடங்கிய தனிநாட்டு கோரிக்கையை தான் நிராகரிப்பதாவும் தெரிவித்துள்ளார்.

இதனை சுட்டிக்காட்டியே சபா குகதாஸ் மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “செல்வராஜ் எம்.பி முடிந்தால் நீங்கள் பெருந் தோட்ட தொழிலாளரின் இரண்டாயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுங்கள்.

எதிரணியில் இருக்கும் போது நீங்கள் சார்ந்த அணியினர் மிக உருக்கமாக பெருந் தோட்ட தொழிலாளர் சம்பள விவகாரத்தில் போராடினார்கள் இச்சந்தர்ப்பத்தில் அதனை நிறைவேற்றி வாக்களித்த உங்கள் மக்களுக்கு உதவுங்கள்.

இலங்கைத்தீவில் மூன்று ராசதானிகள் இருந்த போது வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசம் தமிழர் ராட்சியமாக இருந்த வரலாறு தொடங்கி இலங்கை இந்திய ஒப்பந்தம் வரை வரலாற்றைப் படியுங்கள்.

இணைந்த வடகிழக்கு மாகாணங்களை நீதிமன்றம் சென்று பிரித்த ஜே.வி.பியின் சிங்கள பேரினவாதத்தை மறைக்க இதுவரை எந்த சிங்கள ஆட்சியாளனும் கையாளாத தமிழ் பேரினவாதம் என்ற சொல்லை பயன்படுத்தி துதி பாடுவதை நிறுத்துங்கள் செல்வராஜ் எம்.பி.

உங்களுக்கு முந்திய தலைமுறையை நாடற்றவர்களாக பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு சிங்கள பேரினவாதம் வெளியேற்ற முற்பட்ட போது மிக கடுமையாக போராடியவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் தமிழ்த் தலைவர்களும் மக்களும் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்.

எனவே, பறிக்கப்பட்ட சுயநிர்ணய உரிமைக்காக போராடும் வடக்கு , கிழக்கு ஈழத் தமிழர்களை நோக்கி தமிழ் பேரினவாதம் என்ற வார்த்தையை பேசுவதை தவிருங்கள்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...