16 4
இலங்கைசெய்திகள்

ஆளும் கட்சியினால் பொலிஸார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு

Share

ஆளும் கட்சியினால் பொலிஸார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு

ஆளும் கட்சியினால் பொலிஸார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

கண்டியின் சில பொலிஸ் பிரிவுகளில் ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் குறித்த சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பிரதான அமைப்பாளர் கே.டி. லால்காந்த இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கடந்த 2ம் திகதி மஹய்யாவ பிரதேசத்தில் ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இந்த பிரசாரக் கூட்டம் தொடர்பில் கண்டியின் சில பொலிஸ் பிரிவுகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை பொலிஸார் கிழித்துள்ளதாக லால்காந்த குற்றம் சுமத்தியுள்ளார்.

வேட்பாளர்கள் குறித்த சுவரொட்டிகளை ஒட்ட முடியாது என்ற போதிலும் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், இவ்வாறான ஓர் பின்னணியில் பிரசார சுவரொட்டிகள் அகற்றப்பட்டதாக லால்காந்த குற்றம் சுமத்தியுள்ளார்.

சில பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் பழைய அரசாங்கம் இன்னமும் ஆட்சியில் இருப்பதாக கருதி செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து குறித்த சம்பவங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்படடுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...