8 56
இலங்கைசெய்திகள்

மந்திரவாதி ஞானக்காவுக்கு பல மில்லியன் நட்டஈடு – சிக்கலில் முன்னாள் அரசு

Share

மந்திரவாதி ஞானக்காவுக்கு பல மில்லியன் நட்டஈடு – சிக்கலில் முன்னாள் அரசு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடரான ஞானக்காவுக்கு 28 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு கோட்டா கோ ஹோம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தின் போது, அனுராதபுரத்தில் ஞானக்காவுக்கு சொந்தமான ஆலயம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது.

இதற்கு நட்டஈடாக 28 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அதேவேளை, இந்த வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்காக கடந்த அரசாங்கம் மேலும் 1125 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...