3
இலங்கைசெய்திகள்

13ஆவது சட்ட திருத்தம் குறித்து சஜித்திற்கு ஆதரவளிக்கும் முன்னாள் சபாநாயகர்

Share

13ஆவது சட்ட திருத்தம் குறித்து சஜித்திற்கு ஆதரவளிக்கும் முன்னாள் சபாநாயகர்

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்துவதற்கான சஜித்தின் தீர்மானம் குறித்து அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய (Karu Jayasuriya) அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“போருக்குப் பின்னரான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக அரசாங்கம் வட்டமேசை மாநாடு ஒன்றை நடத்த வேண்டும்.

அதேவேளை, சஜித் பிரேமதாசவின் 13ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டம் தொடர்பான (Sajith Premadasa) உறுதிமொழியை அடுத்து, அரசாங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும், குறிப்பாக தமிழ் குழுக்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chndrika Bnadarathunga), மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் ஜே.வி.பியினரும் (JVP) 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்துவதற்கு ஆதரவளித்துள்ளனர்.

எனவே, இந்த திருத்தம் தொடர்பான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரது, நிலைப்பாட்டை கட்டியெழுப்ப உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் நாடாளுமன்றத்தையும் வலியுறுத்துகின்றேன்.

மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Government Unveils Plans to Boost Domestic Aviation in Support of Tourism
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உள்நாட்டு விமான சேவைகள் விரிவாக்கம்: அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதி!

இலங்கையின் சுற்றுலாத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய...

94745991
செய்திகள்உலகம்

சிரியாவில் அமெரிக்காவின் ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்: ஐஎஸ் இலக்குகள் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்!

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பினரை இலக்கு வைத்து, அமெரிக்கப் படைகள் மற்றும் அதன்...

default
உலகம்செய்திகள்

ஈரானில் 14-வது நாளாகத் தொடரும் போராட்டம்: 116 பேர் உயிரிழப்பு; போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை!

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம்,...

1185212 anbu
செய்திகள்இலங்கை

யாருடன் கூட்டணி? – ராமதாஸ் இன்று சென்னை வருகை; நாளை வெளியாகிறது அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) கூட்டணி நிலைப்பாடு...