rtjy 56 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பு தாமரை கோபுரத்தில் சுழலும் உணவகம்

Share

கொழும்பு தாமரை கோபுரத்தில் சுழலும் உணவகம்

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள சுழலும் உணவகத்தை நாளை மறுதினம் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தெற்காசியாவிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இந்த உணவகம் ஒரே நேரத்தில் 225 முதல் 250 பேர் வரை இருந்து உணவு உட்கொள்ள முடியும்.

இந்த உணவகம் நாளை மறுதினம் மாலை 7.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்படும் என்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் .திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்த உணவகம் பகல் மற்றும் இரவு உணவிற்காக திறந்திருக்கும், அதற்கமைய, சுழலும் உணவகம் மதிய உணவிற்காக காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையிலும் இரவு உணவிற்காக மாலை 6.30 மணி முதல் இரவு 11.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த பார்வையாளர்கள் மூலம் 14 மாத காலப்பகுதிக்குள் 1025.9 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...