tamilnaadi 73 scaled
இலங்கைசெய்திகள்

சாணக்கியனை சாடிய ரோஹித்த

Share

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை கடுமையாக சாடியுள்ளார்.

சாணக்கியன் டொலர்களுக்காக நாடாளுமன்றில் கூச்சலிடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் சாணக்கியனை ரோஹித்த அபேகுணவர்தன இவ்வாறு கடுமையாக திட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், சாணக்கியன் ஒரு விடுதலைப் புலி எனவும் பயங்கரவாதத்தையே கக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழில் ஒன்றையும் சிங்களத்தில் ஒன்றையும் சாணக்கியன் கூறுவதாக தெரிவித்துள்ளார். மீண்டும் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளை கொண்டு வர முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

முழுமையாக இனவாத அடிப்படையில் பேசுவதாகவும், நிலக்கண்ணி வெடிகளை அகற்றிய கௌரவத்தை கூட வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சாணக்கியன் தேசத்துரோக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
WhatsApp Image 2025 11 27 at 23.47.04 f47798a4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மழையிலும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூரும் ‘மாவீரர் தின...

images 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம்: எலிக்காய்ச்சல் காரணமாக 17 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – அல்வாய் கிழக்கு, அல்வாய் பகுதியினைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் ஒருவன் எலிக்காய்ச்சல்...

images 10
செய்திகள்இலங்கை

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 மில்லியன் இழப்பீடு: ஜனாதிபதி பணிப்புரை!

அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு...

PowerCut 1200px 22 11 28 1000x600 1
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலை: மின் விநியோக மார்க்கம் பாதிப்பால் பல பகுதிகளில் மின்சாரம் தடை!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாகப் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை...