tamilni 92 scaled
இலங்கைசெய்திகள்

24 மணித்தியாளங்களில் பாடசாலை மாணவன் உட்பட மூவர் விபத்தில் பலி

Share

24 மணித்தியாளங்களில் பாடசாலை மாணவன் உட்பட மூவர் விபத்தில் பலி

நாட்டில் கடந்த 24 மணித்தியாளங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் பாடசாலை மாணவர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்மடுல்ல நோனாகம பிரதான வீதியில் 09 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் நேற்று (05.09.2023) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஹவத்தையிலிருந்து மாதம்பே நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் சறுக்கிக் கவிழ்ந்ததில், பின்னால் அமர்ந்து சென்ற மாணவன் தூக்கி வீசப்பட்டு எதிர்திசையில் வந்த வானில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் மாணவன் படுகாயமடைந்துள்ளதுடன், கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவன் உயிரிழந்துள்ளான்.

யக்கஹஹெல்ல, கஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கடவத்தை வெளி சுற்றுவட்ட வீதியில் கணேமுல்ல சுற்றுவட்டத்திற்கு அருகில் பாதசாரி கடவையில் பயணித்த ஒருவர் மீது முச்சக்கர வண்டி மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கந்தளாய் பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை லங்கா படுன வீதியின் முட்டிச்சேன பிரதேசத்தில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

மாவடிச்சேனையில் இருந்து லங்கா படுன நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் கவிழ்ந்து கொங்கிரீட் தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...