3 43
இலங்கைசெய்திகள்

தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த பெண் – யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கைது

Share

தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த பெண் – யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கைது

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் நேற்று கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் தலை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நொச்சியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நொச்சியாகம பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது சொகுசு பேருந்து மோதியதில், அதில் பயணித்த கணவன் மனைவியே இந்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே, அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராஜாங்கனை யாய 15 இல் வசிக்கும் 34 வயதுடைய பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் நொச்சியாகம நகரை நோக்கி பயணித்த போது இந்த விபத்திற்குள்ளானதாகவும், விபத்தில் கணவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தை அதிவேகமாக செலுத்தியதாலும், பேருந்து சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலும் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நொச்சியாகம போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவ அறிக்கைக்காக நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரான சாரதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாரதி நொச்சியாகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...