24 662772ea14b8b
இலங்கைசெய்திகள்

யாழ். மானிப்பாய் பகுதியில் விபத்து

Share

யாழ். மானிப்பாய் பகுதியில் விபத்து

யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital ) அனுமதிக்கபட்டுள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் இன்று (23.4.2024) மதியம் யாழ். மானிப்பாய் (Manipay) – காரைநகர் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான அஜிந்தன் எனும் இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மானிப்பாய் – காரைநகர் பிரதான வீதியில் அமைந்துள்ள அரைக்கும் ஆலையில் இருந்து பிரதான வீதியில் முச்சக்கர வண்டி பயணிக்க தொடங்கிய நிலையில், பின்புறமாக வந்த பட்டாரக வாகனம் மோதியுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளதுடன், சாரதியான 20 வயதான அஜிந்தன் எனும் இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

இதேவேளை, பட்டாரக வாகனம் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பத்துடன் மோதி பகுதியளவில் சேதமடைந்த நிலையில் வாகன சாரதி காயங்களின்றி மீட்கபட்டார்.

யாழ்.மாவட்ட போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...