tamilnaadi 82 scaled
இலங்கைசெய்திகள்

இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த கதி

Share

இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த கதி

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன் இருவர் காயம் அடைந்துள்ளனர்.

ரம்பேவ கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த குழுவினர் மீது இன்று அதிகாலை ஜீப் வண்டி ஒன்று மோதி விட்டு சென்றுள்ளது.

மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் வீதியில் நடந்து சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தினால் காயமடைந்த ஐந்து பேரும் மிஹிந்தலை ரம்பேவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிசிச்சை பலனின்றி மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த மற்றைய இரு யுவதிகளும் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த மூவரும் 21, 19 மற்றும் 14 வயதுடையவர்கள். உயிரிழந்தவர்களின் சடலங்கள் ரம்பேவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அனுராதபுரம் வீதியில் ரம்பேவ நகரத்தில் இருந்து வந்த ஜீப் ஒன்று இந்த குழுவினர் மீது மோதிவிட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...