rtjy 121 scaled
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனை

Share

சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனை

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் அணுகலைப் பாதுகாக்கும் கொள்கைகள் மற்றும் விதிகளை ஸ்தாபிக்குமாறு சர்வதேச நாணய நிதியம், இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தனியுரிமை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு வரைவுச் சட்டங்களைச் சுற்றி கடுமையான எதிர்ப்புகள் உள்ளன.

இந்தநிலையில் இந்த விடயங்களில் சரியான சமநிலை நிரூபிக்கப்படாவிட்டால், வெளிப்படைத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க ஆபத்து ஏற்படும் என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 20 முதல் 31 வரையிலான மதிப்பீட்டுப் பணியைத் தொடர்ந்து செப்டம்பர் 30 அன்று வெளியிடப்பட்ட ஆளுகை கண்டறியும் அறிக்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தகவல் அறியும் குழுவின் ஆணையை நிறைவேற்றுவது, நிர்வாகத்திற்கு இன்றியமையாதது என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, தகவல் வெளியிடுபவர்களைப் பாதுகாக்க தெளிவான நடைமுறை விதிகளை நிறுவ வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...