27 3
இலங்கைசெய்திகள்

நியாயமான விலையில் அரிசியை வழங்க வேண்டும் : அநுர உத்தரவு

Share

நியாயமான விலையில் அரிசியை வழங்க வேண்டும் : அநுர உத்தரவு

நாட்டில் எதிர்வரும் மாதங்களில் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் தொடர்ச்சியாக அரிசியை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதிக்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையே நேற்று (02) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மக்களுக்குத் தட்டுப்பாடின்றி அரிசியை வழங்கும் வகையில் நாட்டில் களஞ்சிய வசதிகளை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு பெறுமதி சேர்க்கும் உற்பத்திகளுக்கு நாட்டு அரிசியைப் பயன்படுத்துவதால், நுகர்வுக்குத் தேவையான இருப்புகளில் தட்டுப்பாடு நிலவுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

உர மானியத்தைத் தேசிய உற்பத்திக்கான செயல்திறனுடன் பயன்படுத்தும் நோக்கில் QR குறியீட்டு முறைமை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் வர்த்தகம்,வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe), லக் சதொச தலைவர் கலாநிதி சமித்த பெரேரா மற்றும் சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
16 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 968 சந்தேகநபர்கள் கைது!

இலங்கை முழுவதும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கும், சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர நடவடிக்கைகளின்...

15 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு மீண்டும் வரும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள்: 6 ஆவது கடன் தவணைக்கான மீளாய்வு ஆரம்பம்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று, இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF)...

14 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மரந்தகஹமுல களஞ்சியசாலையைத் திறந்த அரசு: அரிசி விலை உயர்வுக்குத் தீர்வு!

இலங்கையின் அரிசி விலை நிர்ணயத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் மரந்தகஹமுல (Marandagahamula) களஞ்சியத் தொகுதியை, 13...

13 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ருவன்வெல்லையில் வாகன ஸ்டிக்கர் ஒட்டும் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: பெரும் சேதம்!

ருவன்வெல்ல, கரவனல்ல நகரில் அமைந்துள்ள வாகன ஸ்டிக்கர் ஒட்டும் கடை ஒன்றில் இன்று (14) காலை...