6 10
இலங்கைசெய்திகள்

அரிசி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Share

உள்நாட்டு அரிசி வகைகள் அனைத்தினதும் சில்லறை விலை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிவப்பு பச்சை அரிசியின் விலை 18 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பாகடுவ விவசாய ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள உணவு விலை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 2024-2025 பெரும்போக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நெல் வகைகளினதும் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

விநியோகம் குறைவடைந்துள்ள காரணத்தினால் நாடு அரிசியின் விலை 4 முதல் 5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

நாடு அரிசி ஒரு கிலோ கிராம் 230 முதல் 240 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பா மற்றும் சிவப்பு பச்சை அரிசி வகைகளுக்கு சந்தையில் தட்டுப்பாட:டு நிலை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது நாடு அரிசியின் மொத்த விற்பனை விலை உயர்வடைந்துள்ளதாகவும், சிவப்பு அரிசியின் சில்லறை விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 13
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகப் பொது எதிரணி: ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைவு – நுகேகொடையில் பேரணி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் (SJB) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொது...

MediaFile 3 3
செய்திகள்உலகம்

லெபனானில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேலியச் சுவர்: UNIFIL ஆய்வு உறுதி – சுவரை அகற்றக் கோரி ஐ.நா. வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள நீலக் கோட்டைக் கடந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ...

MediaFile 2 4
இந்தியாசெய்திகள்

டெல்லி தாக்குதல்: கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ வெடிபொருள் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு – தடயவியல் குழு உட்பட 7 பேர் பலி!

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்...

images 12 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் 2026 வரவு செலவுத் திட்டம்: 17 நாட்களுக்குக் குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) குழு...