இலங்கைசெய்திகள்

அரிசி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Share
6 10
Share

உள்நாட்டு அரிசி வகைகள் அனைத்தினதும் சில்லறை விலை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிவப்பு பச்சை அரிசியின் விலை 18 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பாகடுவ விவசாய ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள உணவு விலை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 2024-2025 பெரும்போக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நெல் வகைகளினதும் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

விநியோகம் குறைவடைந்துள்ள காரணத்தினால் நாடு அரிசியின் விலை 4 முதல் 5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

நாடு அரிசி ஒரு கிலோ கிராம் 230 முதல் 240 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பா மற்றும் சிவப்பு பச்சை அரிசி வகைகளுக்கு சந்தையில் தட்டுப்பாட:டு நிலை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது நாடு அரிசியின் மொத்த விற்பனை விலை உயர்வடைந்துள்ளதாகவும், சிவப்பு அரிசியின் சில்லறை விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
Related Articles
2 16
இலங்கைசெய்திகள்

தமிழரசு கட்சி ஆதிக்கம்! யாழ். மாவட்டத்தின் இறுதி முடிவுகள்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர...

2 16
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அமோக வெற்றி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச...

2 15
இலங்கைசெய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் பெரும் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...

2 16
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்! அதிக ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...