9 37
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் இரத்து : அநுர அறிவிப்பு

Share

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் இரத்து : அநுர அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகள், சலுகைகள் நிச்சயமாக இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

பத்தேகமவில் (Baddegama) நேற்று (27) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பது, கவனித்துக்கொள்வது மக்களின் வேலையில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இந்த நிலையில், சுற்று நிரூபங்கள், நாடாளுமன்ற சட்டங்கள் அரசமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளுக்கு விசேட சலுகைகள் சிறப்புரிமைகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

 

அந்த சுற்றுநிரூபங்களில் சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவருவது குறித்து கவனம் செலுத்துகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை ஜனாதிபதி தேர்தலின்போது பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என அநுர தரப்பினர் உறுதியளித்திருந்த நிலையில் பொருட்களின் விலை தற்போது அதிகரித்துள்ளதாக ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...