இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் இரத்து : அநுர அறிவிப்பு

Share
9 37
Share

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் இரத்து : அநுர அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகள், சலுகைகள் நிச்சயமாக இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

பத்தேகமவில் (Baddegama) நேற்று (27) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பது, கவனித்துக்கொள்வது மக்களின் வேலையில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இந்த நிலையில், சுற்று நிரூபங்கள், நாடாளுமன்ற சட்டங்கள் அரசமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளுக்கு விசேட சலுகைகள் சிறப்புரிமைகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

 

அந்த சுற்றுநிரூபங்களில் சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவருவது குறித்து கவனம் செலுத்துகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை ஜனாதிபதி தேர்தலின்போது பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என அநுர தரப்பினர் உறுதியளித்திருந்த நிலையில் பொருட்களின் விலை தற்போது அதிகரித்துள்ளதாக ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...