26 698c47ac9db6d
அரசியல்இலங்கைசெய்திகள்

தற்போதைய அரசாங்கம் மீது சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கடும் குற்றச்சாட்டு!

Share

தற்போதைய அரசாங்கம் தனது ஆதரவாளர்களைப் பதவிகளுக்கு நியமிப்பதன் மூலம், நாட்டில் எஞ்சியிருக்கும் அரச சேவையையும் சீரழித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் (Facebook) பக்கத்தில் பதிவிட்டுள்ள விசேட குறிப்பிலேயே அவர் இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

“நேர்மையான மற்றும் தொழில்முறைத் திறமை கொண்ட அரச சேவை இல்லாமல் எந்தவொரு அரசாங்கமும் வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்ல முடியாது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் தலைவர்களுக்குப் போதிய நிர்வாக அனுபவம் இல்லாவிட்டாலும், அவர்களிடம் அசைக்க முடியாத நேர்மை இருக்க வேண்டும் என்றும், நாட்டை நிர்வகிக்கும்போது அனுபவம் வாய்ந்த தொழில்முறை அதிகாரிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எமது தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து ஜனநாயக ரீதியில் தீர்மானிக்க வேண்டிய தருணம் இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் சந்திரிக்கா தனது பதிவில் விசேடமாகக் குறிப்பிட்டுள்ளார். சமன் ஏக்கநாயக்கவை தனக்குத் தனிப்பட்ட ரீதியில் நீண்டகாலமாகத் தெரியும் எனத் தெரிவித்துள்ள அவர், ஏக்கநாயக்க மிகவும் நேர்மையான மற்றும் உயர்தரமான தொழில்முறை அரச அதிகாரி எனச் சான்றிதழ் அளித்துள்ளார். அத்தகைய அதிகாரிகளைச் சிறையில் அடைப்பது அரச சேவையை முடக்கும் செயல் என அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

நீதி வழங்குவது என்பது ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படுவது நாட்டின் ஒட்டுமொத்த ஆட்சி முறைக்கும் விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும் என அவர் எச்சரித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் பழிவாங்கும் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், தகுதி அடிப்படையிலான நியமனங்கள் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...