rtjy 110 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை அமைச்சரவையில் சிறிய மாற்றம்

Share

இலங்கை அமைச்சரவையில் சிறிய மாற்றம்

இலங்கையின் அமைச்சரவையில் சிறிய மாற்றம் ஒன்று விரைவில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைக்காலமாக அமைச்சர்கள் சிலருக்கும் ராஜாங்க அமைச்சர்கள் சிலருக்கும் இடையில் இடம்பெற்ற திணைக்களப் பொறுப்பு இழுபறி மற்றும் வசதிகள் குறித்து பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே இந்த மாற்றம் நிகழவுள்ளதாக அரசாங்க தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக இந்த பிரச்சினைகள் குறித்து கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அமைச்சுக்களின் மாற்றங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் அமைச்சரவை அலுவலகம் மற்றும் பிற அரசு நிறுவனங்கள் மே 17 முதல் ஆகஸ்ட் 26 வரை பெரிய அளவிலான தரவுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அலுவலகம் உட்பட, மின்னஞ்சல் டொமைனைப் பயன்படுத்தும் அனைத்து அரசாங்க அலுவலகங்களும், பாரிய வைரஸ் தாக்குதலுக்குப் பின்னர், 2023 மே 17 முதல் ஆகஸ்ட் 26 வரையிலான தரவுகளை இழந்துள்ளதாக, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான ஐசிடீஏ உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதல்; சுமார் 5,000 மின்னஞ்சல் முகவரிகளை பாதித்திருக்கலாம் என்று ஐஊவுயு நிறுவன மேலாளர் மகேஸ் பெரேரா கூறியுள்ளார்.

சுமார் இரண்டரை மாத மதிப்புள்ள தரவுகளுக்கு ஓஃப்லைன் காப்புப்பிரதி )எதுவும் இல்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டதுடன், ஒன்லைன் காப்பு பிரதிகளும் சிதைந்து விட்டன என்று அவர் தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தொலைந்து போன தரவுகளை மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறது என்று பெரேரா கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....