24 65fba3494093d 1
இலங்கைசெய்திகள்

இடைவிடாத உணவுத்தவிர்ப்பினை சவாலுக்கு உட்படுத்தியுள்ள ஆய்வு

Share

இடைவிடாத உணவுத்தவிர்ப்பினை சவாலுக்கு உட்படுத்தியுள்ள ஆய்வு

இடைவிடாத உணவுத்தவிர்ப்பினால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் (American heart Association) ஆய்வானது சவாலுக்கு உட்படுத்தியுள்ளது.

தினமும் எட்டு மணிநேரம் உணவு உண்ட நிலையில் மீதமுள்ள 16 மணிநேரம் உணவை உண்ணாமல் இருப்பவர்களுக்கு இதய நோயால் இறப்பு சதவீதம் அதிகம் என்று கடந்த 18ஆம் திகதி வெளியிடப்பட்ட குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு நேரத்தை ஒரு நாளைக்கு எட்டு மணிநேரமாக கட்டுப்படுத்துவது இதய நோயால் ஏற்படும் இறப்பு அபாயத்தில் 91 சதவீதம் அதிகரிப்புடன் தொடர்புடையது என்று அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

மருத்துவர் விக்டர் ஜாங் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் சராசரியாக 49 வயதுடைய சுமார் 20,000 நபர்களை இதற்காக ஆய்வு செய்துள்ளனர்.

இதன் முடிவில் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துபவர்கள் 12 அல்லது 16 மணிநேரங்களில் சாப்பிட்டவர்களை விட 91 சதவீதம் இதய நோயால் இறப்பதற்கான ஆபத்துக்களை கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாளைக்கு 16 மணி நேரத்திற்கும் மேலாக சாப்பிடுபவர்கள் நோயால் இறக்கும் வாய்ப்பு குறைவு எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, உணவு நேரத்தை குறைக்கும் காரணத்தினால் ஒட்டுமொத்த மரண அபாயத்தைக் குறைக்கமுடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தினமும் எட்டு மணிநேரம் போன்ற ஒரு குறுகிய காலத்திற்கு தினசரி உணவு நேரத்தை கட்டுப்படுத்துவது உடல் எடையை குறைக்க மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக கருதப்பட்டு வருகிறது.

எனினும், அதனை தமது ஆய்வுகள் நிரூபிக்கவில்லை என்று மருத்துவர் ஜாங் கூறியுள்ளார்.

எட்டு மணி நேரக் கட்டுப்படுத்தப்பட்ட உணவு அட்டவணையைப் பின்பற்றுபவர்கள் இருதய நோயால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதைக் கண்டு தாம் ஆச்சரியப்பட்ட போதும் தமது ஆராய்ச்சியின் முடிவு தெளிவானது என்று மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...