24 66306e7ed48b9
இலங்கைசெய்திகள்

கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் பாப்பரசர் பிரான்சிஸ் கோரிக்கை

Share

கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் பாப்பரசர் பிரான்சிஸ் கோரிக்கை

ஓய்வுபெறும் வயதை எட்டிய போதிலும் கொழும்பு பேராயர் பதவியில் நீடிக்குமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் (Cardinal Malcolm Ranjit) பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தேசிய தொடர்பாடல் பணிப்பாளர் ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், கர்தினால் சேவை நீடிப்பு கோரியதாக கூறி அரசாங்க அமைச்சர் ஒருவரினால் நாடாளுமன்றத்தில் தவறான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில், கர்தினால் சேவை நீடிப்பை கோரவில்லை என அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், தாம் ஓய்வுபெறும் வயதை அடைந்துவிட்டதாக கர்தினால் ஒன்றரை வருடங்களுக்கு முன்பே வத்திக்கானுக்கு அறிவித்துவிட்டார்.

எனினும், கர்தினால் இன்னும் பணிபுரிய முடியும் என்பதால் அவரை பணியை தொடருமாறு பாப்பரசர் வேண்டுகோள் விடுத்ததாக தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.

கொழும்பில் உள்ள கத்தோலிக்க திருச்சபையும் கர்தினாலை கொழும்பு பேராயர் பதவியில் நீடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...