24 66063257cf64e
இலங்கைசெய்திகள்

இலங்கையின் சர்வதேச இறையான்மை பத்திரங்களை மறுசீரமைக்க கோரிக்கை

Share

இலங்கையின் சர்வதேச இறையான்மை பத்திரங்களை மறுசீரமைக்க கோரிக்கை

இலங்கை தனது 12 பில்லியன் டொலருக்கான சர்வதேச இறையான்மை பத்திரங்களை மறுசீரமைப்பு செய்வதற்காக கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

டொலரின் கடுமையான பற்றாக்குறை காரணமாக இலங்கையின் பொருளாதாரம் ஆழ்ந்த நிதி நெருக்கடியில் தள்ளப்பட்ட நிலையிலேயே கடன் மறுசீரமைப்பை இறுதி செய்வதற்கான புதிய அடையாளமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, 2022 மே மாதத்தில் இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என அறிவித்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை அரசாங்கம் இந்த வாரம், சர்வதேச இறையான்மை பத்திரப்பதிவுதாரர்களுடன் முறையான மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இலங்கை தமது சர்வதேச இறையாண்மை பத்திரங்களின் மறுசீரமைப்பின் பின்னணியில், தற்போதுள்ள பத்திரங்களை அமெரிக்க டொலர்களில் புதிய பத்திரங்களுக்கு அதே நாணயத்தில் மாற்றுவதற்கான நோக்கில் செயல்பட்டு வருகிறது” என்று நிதி அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2024 ஏப்ரல் 10ஆம் திகதிக்குள் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என இலங்கையின் நிதியமைச்சகம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் QR முறை தற்காலிகமாக நீக்கம்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பயணிக்கும் பொதுமக்களின் வசதிக்காக, எரிபொருள் விநியோகத்தில்...

world 76
செய்திகள்உலகம்

அமெரிக்க அரசின் இரகசியங்களை வைத்து கோடிக் கணக்கில் லாபம்?

ஈரான் மீதான போர் கடந்த பிப்ரவரி 28-ஆம் திகதி தொடங்கியதிலிருந்து, சர்வதேச நிதிச் சந்தைகளிலும், குறிப்பாக...

world 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகம மாணவன் மரணம்: மாரடைப்பால் நிகழ்ந்ததாகப் பிரேத பரிசோதனையில் உறுதி!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய விருந்தின் போது உயிரிழந்த 19...

world 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்குளியில் சோகம்: பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற மாணவி விபத்தில் பலி!

கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (ஏப்ரல் 10, 2026) நண்பகல்...