28 14
இலங்கைசெய்திகள்

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை

Share

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை

பயங்கரவாத குழுக்களால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை தடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மீண்டும் நாட்டில் நியமிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

ஊடகங்களுக்கு நேற்று (23) கருத்து தெரிவித்துள்ள அவர், நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து வருகிறது.

 

இந்தநிலையில் அச்சுறுத்தல்கள் தொடர்பான செய்திகள் நாட்டுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

 

எனவே தற்போதைய அரசாங்கம் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

முன்னைய தமது அரசாங்கம் ஏனைய நாடுகளுடன் புலனாய்வுப் பகிர்வு வலையமைப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

இந்த வலையமைப்பின் ஊடாக முக்கியமான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

 

இதன் விளைவாக இலங்கை சமீப வருடங்களில் பெரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இதுபோன்றே தற்போதைய அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த அச்சுறுத்தல்கள் தோன்றியிருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Share
தொடர்புடையது
01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...

01 27
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அதிக விலைக்கு அரிசி விற்பனை: கடை உரிமையாளருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட (MRP) அதிக விலைக்கு உள்நாட்டு கீரி சம்பா அரிசியை...

01 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் பதற்றம்: சொகுசு வாகனங்கள் இலங்கையில் தரையிறக்கம்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

01 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடியில் பாரிய ஊழல்: அரசுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போர்க்கொடி!

நாட்டில் தற்போது நிலவி வரும் மின்சார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றத்தின் பின்னணியில் பாரிய ஊழல்கள்...