24 6647d3683bf4f
இலங்கைசெய்திகள்

தமிழினப் படுகொலையை சர்வதேச அங்கீகாரத்துக்கு எடுத்துச்செல்லும் ரேணுகா

Share

தமிழினப் படுகொலையை சர்வதேச அங்கீகாரத்துக்கு எடுத்துச்செல்லும் ரேணுகா

இலங்கையில் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படாத முள்ளிவாய்க்கால் நினைவு தினம், புலம்பெயர்ந்த தமிழர்கள் சர்வதேச ரீதியில் அதனை நினைவு கூறுகின்றனர் என்று அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் எனப்படும் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், அவுஸ்திரேலியாவின் இளம் தமிழ் செயற்பாட்டாளரான ரேணுகா இன்பகுமாரின் நேர்காணலை குறித்த ஊடகம் செய்தியாக தொகுத்துள்ளது.

ரேணுகா தனது 10 ஆவது வயதில் ஈழத்தமிழ் ஏதிலிகளுக்காக போராடத் தொடங்கியுள்ளார்.

தற்போது 21 வயதாகும் அவர், தமிழீழ இனப்படுகொலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழத் தமிழ் ஏதிலிகளின் கதைகளைப் பகிர்ந்துகொள்ளவும் தனது குரலை தொடர்ந்து பயன்படுத்துகிறார்.

2009 ஆம் ஆண்டு, 25 ஆண்டுகளாக நீடித்த இலங்கை உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தமிழ் புலிகள் என்று அழைக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் துன்புறுத்தல்களால் உந்தப்பட்டு, வடகிழக்கில் தமிழீழம் என்ற ஒரு சுதந்திரத் தமிழ் அரசை நிறுவ போராடியுள்ளனர்.

இந்த உள்நாட்டுக் கலவரத்தின் போது, ஈழத்தமிழ் சமூகம் மரணங்கள், துன்புறுத்தல்கள், மற்றும் தீர்க்கப்படாத காணாமல் போனவர்கள் போன்ற துன்பங்களை எதிர்கொண்டுள்ளது.

ரேணுகா, தனது குடும்பத்தினருடன் சேர்ந்து, தமிழீழ இனப்படுகொலைகளின் சர்வதேச அங்கீகாரத்திற்காகவும், இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பின் தொடர்ந்து உரையாடல்களை உருவாக்குவதற்காகவும் நீண்ட காலமாக பிரசாரம் செய்து வருகிறார்.

இப்போது, வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை சட்டம் – கலைப் படிப்பை முடிக்கும் நிலையில் உள்ள ரேணுகா தனது வாழ்க்கையில், தனது சமூகத்திற்கு ஆதரவான மாற்றத்தை சுயாதீனமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார் என்று அவுஸ்திரேலிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் “நான் என் வாழ்நாள் முழுவதும் தமிழ் ஈழத்திற்கு சென்றதில்லை, எனினும் அந்த வார்த்தையை மட்டும் என்னால் முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும்” என்று ரேணுகா குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...