25 677bbd2ab9b9a
இலங்கைசெய்திகள்

வாகன சாரதிகளுக்கு காவல்துறை விடுத்த முக்கிய அறிவிப்பு

Share

வாகன சாரதிகளுக்கு காவல்துறை விடுத்த முக்கிய அறிவிப்பு

பேருந்துகள், லொறிகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரி பாகங்களை அகற்றுவதற்கு இரண்டு வார கால அவகாசம் காவல்துறை போக்குவரத்து திணைக்களம் வழங்கியுள்ளது.

இதன்படி எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் தமது வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள உதிரி பாகங்களை அகற்றுமாறு காவல்துறை போக்குவரத்து பிரிவினர் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 17ஆம் திகதியின் பின்னர் உதிரி பாகங்கள் பொருத்தப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் எதிராக சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

வாகன சாரதிகளுக்கு காவல்துறை விடுத்த முக்கிய அறிவிப்பு | Remove Unnecessary Parts From Vehicles Before 17Th

இதன்படி, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சத்தம் எழுப்பும் ஹார்ன்கள், இரும்பு கம்பிகள், தேவையற்ற மின்விளக்குகள், அலங்காரங்கள் என அனைத்து தேவையற்ற கூறுகளும் அகற்றப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

இந்த தேவையற்ற உதிரி பாகங்கள் பொதுவாக தனியார் பேருந்துகளிலும் முச்சக்கரவண்டிகளிலும் காணப்படுவதாக தெரிவித்த பிரதி காவல்துறை மா அதிபர், இந்த உதிரி பாகங்களினால் பொதுமக்கள் அவதியுறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 17 ஆம் திகதி பிறகு, நிறுவப்பட்ட இந்த உதிரி பாகங்களை சட்டத்தின் வரிசையில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடங்கப்படும் என்றும் பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹப்புகொட அறிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...