25 677bbd2ab9b9a
இலங்கைசெய்திகள்

வாகன சாரதிகளுக்கு காவல்துறை விடுத்த முக்கிய அறிவிப்பு

Share

வாகன சாரதிகளுக்கு காவல்துறை விடுத்த முக்கிய அறிவிப்பு

பேருந்துகள், லொறிகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரி பாகங்களை அகற்றுவதற்கு இரண்டு வார கால அவகாசம் காவல்துறை போக்குவரத்து திணைக்களம் வழங்கியுள்ளது.

இதன்படி எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் தமது வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள உதிரி பாகங்களை அகற்றுமாறு காவல்துறை போக்குவரத்து பிரிவினர் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 17ஆம் திகதியின் பின்னர் உதிரி பாகங்கள் பொருத்தப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் எதிராக சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

வாகன சாரதிகளுக்கு காவல்துறை விடுத்த முக்கிய அறிவிப்பு | Remove Unnecessary Parts From Vehicles Before 17Th

இதன்படி, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சத்தம் எழுப்பும் ஹார்ன்கள், இரும்பு கம்பிகள், தேவையற்ற மின்விளக்குகள், அலங்காரங்கள் என அனைத்து தேவையற்ற கூறுகளும் அகற்றப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

இந்த தேவையற்ற உதிரி பாகங்கள் பொதுவாக தனியார் பேருந்துகளிலும் முச்சக்கரவண்டிகளிலும் காணப்படுவதாக தெரிவித்த பிரதி காவல்துறை மா அதிபர், இந்த உதிரி பாகங்களினால் பொதுமக்கள் அவதியுறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 17 ஆம் திகதி பிறகு, நிறுவப்பட்ட இந்த உதிரி பாகங்களை சட்டத்தின் வரிசையில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடங்கப்படும் என்றும் பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹப்புகொட அறிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...