25 67b5dd0d206f8
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் : தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு

Share

உள்ளூராட்சி தேர்தல் : தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பில் தேர்தல் ஆணையம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

இதன்படி கட்டுப்பணத்தை திரும்ப பெறுவதற்காக பெப்ரவரி 28, 2025 க்கு முன்னர் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் எழுத்துபூர்வமாக விண்ணப்பிக்கமுடியும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு இன்று(19) அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலுக்கு வைப்புத்தொகை

2023உள்ளூராட்சி தேர்தலுக்கு வைப்புத்தொகை செலுத்திய வேட்பாளர்கள், வைப்புத்தொகை சிட்டைகளை தாங்கள் தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் வைப்புத்தொகையைப் பெறலாம் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்பாளர்கள் தங்கள் வைப்புத்தொகை சிட்டைகளை பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன் எழுத்துபூர்வ கோரிக்கையுடன் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தகுதியான வேட்பாளர்களுக்கு நிதியை தாமதமின்றி திருப்பித் தர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...