17 1
இலங்கைசெய்திகள்

சிறிலங்கா அதிபரின் பதவிக் கால விவகாரம்: அம்பலமாகும் அரசாங்கத்தின் முயற்சி

Share

சிறிலங்கா அதிபரின் பதவிக் கால விவகாரம்: அம்பலமாகும் அரசாங்கத்தின் முயற்சி

சிறிலங்கா அதிபரின் பதவிக் காலம் தொடர்பில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்து மக்கள் கருத்துக் கணிப்புக்கு செல்ல அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி (Chandima Weerakkody) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் சிறிலங்கா அதிபரின் பதவிக் காலம் குறித்து மக்கள் கருத்து கணிப்பை நடத்த உச்சநீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டாலும் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை கூட அரசாங்கத்தால் பெற முடியாது எனவும் எதிர்க்கட்சி என்ற வகையில் அதனை அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு தமக்கு அதிகாரம் கிடைத்த 17ஆம் திகதி, அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அறிவிப்பை ஒத்திவைத்தால், அரசாங்கத்தின் தந்திர வியூகத்தின் வெற்றிக்கு தேவையான கால அவகாசம் வழங்குது போல் ஆகிவிடும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...