இலங்கைசெய்திகள்

சிறிலங்கா அதிபரின் பதவிக் கால விவகாரம்: அம்பலமாகும் அரசாங்கத்தின் முயற்சி

17 1
Share

சிறிலங்கா அதிபரின் பதவிக் கால விவகாரம்: அம்பலமாகும் அரசாங்கத்தின் முயற்சி

சிறிலங்கா அதிபரின் பதவிக் காலம் தொடர்பில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்து மக்கள் கருத்துக் கணிப்புக்கு செல்ல அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி (Chandima Weerakkody) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் சிறிலங்கா அதிபரின் பதவிக் காலம் குறித்து மக்கள் கருத்து கணிப்பை நடத்த உச்சநீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டாலும் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை கூட அரசாங்கத்தால் பெற முடியாது எனவும் எதிர்க்கட்சி என்ற வகையில் அதனை அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு தமக்கு அதிகாரம் கிடைத்த 17ஆம் திகதி, அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அறிவிப்பை ஒத்திவைத்தால், அரசாங்கத்தின் தந்திர வியூகத்தின் வெற்றிக்கு தேவையான கால அவகாசம் வழங்குது போல் ஆகிவிடும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...