24 666253cd8dd40
இலங்கைசெய்திகள்

சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு: நிதியமைச்சு அறிவிப்பு

Share

சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு: நிதியமைச்சு அறிவிப்பு

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வில் சித்தியடைந்து இதுவரை ஆட்சேர்ப்பு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் இருந்து விசேட அறிக்கை கோரப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

ஆட்சேர்ப்பு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் தொடர்பான விசேட அறிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி (01ஆம் திகதி) அழைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படாத இந்த முந்நூற்று பதினாறு பெண் விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் பதினைந்து நாட்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அது நிராகரிக்கப்படவில்லை எனவும், அதனை ஆராய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட கண்காணிப்புப் பத்திரம் மாத்திரமே நிராகரிக்கப்பட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வில் சித்தியடைந்த இரண்டாயிரத்து எண்ணூற்று முப்பத்தாறு (2836) விண்ணப்பதாரர்களில் 2500 விண்ணப்பதாரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்ட போதிலும், முந்நூற்று ஏழு தகுதியான விண்ணப்பதாரர்கள் இதுவரை சுகாதார அமைச்சினால் ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை.

நான்கு வருடங்களுக்கு முன்னர் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியானதோடு நேர்முகத்தேர்வில் 2836 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் இரண்டு கட்டங்களாக 2500மாணவிகள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 300 மாணவர்களுக்கான தகுதியுடைய மாணவர் சேர்க்கையை சுகாதார அமைச்சு இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...