15 3
இலங்கைசெய்திகள்

வாக்காளர்களுக்கு பங்கிடுவதற்காக மறைத்து வைக்கப்பட்ட பொருட்கள் மீட்பு

Share

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்குப் பங்கிடுவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மன்னார் (Mannar) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்பன், ஸ்வர்ணபுரி கிராமத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்கிருந்த பாழடைந்த வீடொன்றில் இருந்து 1400 பிளாஸ்டிக் பாய்கள் கொண்ட 28 பார்சல்கள், படுக்கை விரிப்புகள் (பெட்சீட்) 1400 கொண்ட 14 பார்சல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு பங்கிடுவதற்காக இவை மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...