26 4
இலங்கைசெய்திகள்

திருமணம் நடந்து 4 நாட்களில் நடந்த பரபரப்பு – மணப்பெண்ணை கடத்திய கும்பல்

Share

திருமணம் நடந்து 4 நாட்களில் நடந்த பரபரப்பு – மணப்பெண்ணை கடத்திய கும்பல்

அனுராதபுரம், தம்புத்தேகம பிரதேசத்தில் திருமணம் நடந்து 4 நாட்களின் பின் இளம் பெண் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20 வயதான பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தியுள்ளதாக பொலிஸாரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் தந்தை ஒரு பொலிஸ் அதிகாரி எனவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மணப்பெண் முற்றத்தை துப்பரவு செய்து கொண்டிருந்த போது கும்பல் ஒன்றினால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டுள்ளார்.

மணப்பெண் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்த போதிலும் தடுத்து நிறுத்த முடியாமல் போயுள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வடமேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த கித்சிறி தெரிவித்துள்ளார்.

கடத்தல்காரர்கள் மூவரையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மணமகள் கடத்தப்பட்ட போது மணமகன் வீட்டில் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்ட மணப்பெண் குறித்து நேற்று மாலை வரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...