எம்.பி.பி.எஸ் (MBBS) பட்டப்படிப்பை முடித்த சுமார் ஆறாயிரம் இளம் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன பாராளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செலவினத் தலைப்பு மீதான வரவுசெலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தின் போது அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
வரலாற்றில் முதல் முறையாக இரண்டு முக்கியக் கோரிக்கைகளுக்காகச் சிறப்பு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கவிந்த ஜெயவர்தன தெரிவித்தார்.
மருத்துவமனைகளில் 131 வகையான அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லாதபோது, நோயாளிகள் அவற்றை வெளி மருந்தகங்களில் இருந்து வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மருத்துவர்கள் மருந்துச் சீட்டு எழுதாதபோது என்ன நடக்கும் என்பது புரிந்துகொள்ளத்தக்கது என்றும் அவர் கூறினார்.
இலங்கையின் சுகாதார அமைப்பு ஒரு பாரிய நெருக்கடியை எதிர்நோக்குவதாகவும், இதற்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.