6 46
இலங்கைசெய்திகள்

எந்த நேரத்திலும் வெளியேற தயார் : மகிந்த அறிவிப்பு

Share

எந்த நேரத்திலும் வெளியேற தயார் : மகிந்த அறிவிப்பு

கொழும்பு விஜேராம மாவத்தையில் தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை எந்த நேரத்திலும் விட்டு வெளியேற தயாராக இருப்பதாகவும், ஒரு கணம் கூட அங்கு தங்குத் தயாராக இல்லை என்றும் மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(anura kumara dissanayake), உத்தியோகபூர்வ இல்லத்தில் மகிந்த ராஜபக்ச தொடர்ந்து வசித்தால், மாத வாடகையாக 4.6 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும், இல்லையெனில் அவர் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக கூறியது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்று கேட்டவேளை பதிலளிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தக் கருத்தை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யுமாறு எழுத்துபூர்வமாக இன்னும் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், அது கிடைத்தவுடன் காலி செய்வதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதியாக அரசாங்கத்திடமிருந்து பெற்ற அனைத்தையும் திரும்பப் பெற்றாலும், மகிந்த ராஜபக்ச ஒரு புலம்பல் செய்பவர் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் அரச தலைவருக்கு பொருத்தமான வீடு வாடகை இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு தெளிவாகக் கூறுகிறது என்றும், அதன்படி, தான் இந்த அதிகாரபூர்வ இல்லத்தில் வசிக்கிறார் என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

இது தொடர்பாக ஜனாதிபதி எந்த முடிவையும் எடுக்க முடியும் என்றாலும், இதன்மூலம் தனது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது என்று அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான ஜனாதிபதி அநுரவின் பகிரங்க அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(prasanna rantunga), நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அவரைச் சந்திக்க விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றனர்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...