17 9
இலங்கைசெய்திகள்

ரணிலின் திட்டத்தை சவாலுக்குட்படுத்த தயாராகும் நாடாளுமன்ற எம்.பிக்கள்

Share

ரணிலின் திட்டத்தை சவாலுக்குட்படுத்த தயாராகும் நாடாளுமன்ற எம்.பிக்கள்

ஜனாதிபதியின் தந்திரத்தை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்றும், 22 ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதனை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் எனவும், பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அவரது கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் மக்களை குழப்பத்துக்குள் தள்ளும் வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் உருவாக்கப்படும் போது அதன் 83(ஆ) உறுப்புரையை திருத்தம் செய்ய மறந்து விட்டோம்.

ஆகவே மன்னித்து விடுங்கள் என்று குறிப்பிட்டுக் கொண்டு 22 ஆவது திருத்தத்தை ஜனாதிபதி கொண்டு வந்துள்ளார்.

22 ஆவது திருத்தம் பற்றி ஜனாதிபதி குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் அரசியலமைப்பின் 30(2) உறுப்புரை திருத்தப்பட்டு, 06 வருட பதவி காலம் ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டது.

83(ஆ) உறுப்புரையில் ஆறு வருடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை திருத்தம் செய்தாலும், செய்யாவிடினும் எவ்வித பயனும் கிடைக்காது.

அதனால் ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது இதனை உயர்நீதிமன்றம் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் 83(ஆ) உறுப்புரையை திருத்தம் செய்ய முடியாமல் போனது என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது.

அந்த உறுப்புரையை திருத்தம் செய்ய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால் அவ்விடயம் குறித்து அவதானம் செலுத்தவில்லை” என்றார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....