image 28f29109e8
அரசியல்இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மின்சாரம், நீர் கட்டணத்தில் 50% தள்ளுபடி: ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்!

Share

நவம்பர் மாதக் கடைசியில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்காக, 2025 டிசம்பர் மாதத்திற்குரிய மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் முழு நாட்டையும் கடுமையாகப் பாதித்த மிகப் பெரும் பேரழிவாக இந்த வெள்ளம் அமைந்துள்ளது என ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழங்கப்படும் நிவாரணங்களுக்கு அப்பால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது சேதமடைந்த உடைமைகளைச் சுத்தம் செய்து சீரமைக்க அதிக அளவில் தண்ணீரும், மின்சாரமும் பயன்படுத்தப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாகவும், உள ரீதியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மீண்டும் வாழ்க்கையை முன் கொண்டு செல்ல உதவும் நோக்கத்தில், 2025 டிசம்பர் மாதத்திற்குரிய நீர் மற்றும் மின்சார கட்டணங்களில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.

Share
தொடர்புடையது
1748968110 WhatsApp Image 2025 06 03 at 8.24.23 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

நம்பகமான கல்விப் பங்காளியாகத் தொடர்வோம்: அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் பிரதமரிடம் உறுதி!

இலங்கையின் நம்பகமான கல்விப் பங்காளி என்ற வகையில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள், கல்வி...

15786408 national 02
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெலிவேரிய விடுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: ஐஸ் போதைப் பொருள் கொடுத்து 21 வயதுப் பெண்ணுக்குத் துன்புறுத்தல்!

வெலிவேரிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கட்டாயப்படுத்தி ஐஸ் போதைப் பொருள் (Ice...

images 7 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முத்தையன்கட்டு அணையில் திருத்த வேலைகள்; அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை: வதந்திகளை நம்ப வேண்டாம்!

முத்தையன்கட்டு அணையின் வால் கட்டு (Tail end/Sluice Gate area) அருகில் தற்போது சிறிய அளவிலான...

25 692bfb29122ad
இலங்கைசெய்திகள்

கண்டி மாவட்டத்தில் சூறாவளிப் பாதிப்பு: 240 உயிரிழப்புகள், 75 பேர் மாயம் – 1.89 இலட்சம் பேர் பாதிப்பு! 🌪️

திட்வா சூறாவளி காரணமாக நாடு முழுவதும் பெய்த கனமழையால் அதிக சேதத்தை சந்தித்த கண்டி மாவட்டத்தில்...