14 9
இலங்கைசெய்திகள்

தேர்தலுக்கான நிதி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

Share

தேர்தலுக்கான நிதி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் (Presidential Election) போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பிரச்சினையல்ல என்றும் நிதி ஒதுக்குவதற்கு நிதியமைச்சு தயாராக உள்ளது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

யட்டியந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவின மதிப்பீடு இன்னும் 10 கோடி ரூபாயை தாண்டவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

10 பில்லியன் வரம்பு, சில வேளைகளில் வேட்பாளர்களின் எண்ணிக்கை வாக்குச் சீட்டுக்கு அதிகமாக இருந்தால், அதிகரிக்கப்படலாம்.

அந்த வகையில், ஒரு வேட்பாளருக்கு சுமார் 100 மில்லியன் ருபாய் கூடுதல் செலவாகும்.

இருப்பினும், ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகளுக்கு நிதியளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

தேர்தலுக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகமும் குறிப்பிட்டுள்ளது.

ஆணையகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகளுக்குப் பின்னர் இன்னும் பணம் மீதம் உள்ளது.

அத்துடன் அச்சிடுதல், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து போன்ற செலவுகளைத் தவிர, அதிகாரிகளின் கொடுப்பனவுகள் போன்ற சில செலவுகள் எஞ்சியுள்ளன என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...