1 1
இலங்கைசெய்திகள்

ரணிலின் வியூகம் எதிர்க்கட்சியை பிளக்க சதி!!

Share

ரணிலின் வியூகம் எதிர்க்கட்சியை பிளக்க சதி!!

அமைச்சரவை மாற்றம் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப்பதவியை வழங்க ரணில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ரணில் மற்றும் ஆளும் கட்சி இடையே அண்மைய சில வாரங்களாக முக்கிய கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில், உரியமுறையில் செயற்படத் தவறிய, சில முக்கிய அமைச்சுப் பதவிகளை அதிபர் ரணில் விக்ரமசிங்க மாற்றியமைப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.சுகாதார அமைச்சு மற்றும் ஊடகத்துறை அமைச்சு என்பன இதில் அடங்குமென தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக அதிபருக்கும், பசில் ராஜபக்ச தலைமையிலான சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியினருக்கும் இடையிலான அண்மைய சந்திப்புகளில், புதிய அமைச்சுப் பதவிகளை பொதுஜன பெரமுன கோரியுள்ளது. எனினும் தற்போதுள்ள நெருக்கடிகள் மற்றும் பொருளாதார இன்னல்களுக்கு மத்தியில் செயற்படக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என அதிபர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...