24 663300bd4303b
இலங்கைசெய்திகள்

ரணிலின் மே தின உரை : வெளியான தகவல்

Share

ரணிலின் மே தின உரை : வெளியான தகவல்

நாட்டுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் மட்டுமே சுபமுகூர்த்தம் உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசி்ங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

மே தின நிகழ்வில் நேற்றைய தினம் (01.05.2024) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

”ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கிய போது அதனை அங்குரார்ப்பணம் செய்வதற்காக சுபமுகூர்த்தம் ஒன்றை கட்சியின் ஸ்தாபகர் டீ.எஸ். சேனநாயக்க (D.S. Senanayake) தேடியிருந்தார்.

அதே போன்றதொரு சுப முகூர்த்த நேரத்திலேயே நாட்டிற்கான சுதந்திரத்தையும் பெற்றுக்கொண்டிருந்தார்.

அந்த வகையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இந்த நாட்டுக்கும் மட்டுமே சுபமுகூர்த்தம் உள்ளது. அதன் காரணமாகவே பொருளாதார நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்த நாட்டை எம்மால் கட்டி எழுப்ப முடிந்தது. மற்றவர்கள் எல்லாம் நாட்டைப் பொறுப்பேற்க மறுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டனர்.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒற்றை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நான் அந்த சவாலை எதிர்கொண்டேன்.

இதற்கமையவே, பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். மேலும், இன்று நாடும் நெருக்கடியில் இருந்து மீ்ட்சி பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதற்கு நாட்டுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் மட்டுமே உள்ள சுபமுகூர்த்தமே காரணம்” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...