27 5
இலங்கைசெய்திகள்

நுவரெலியாவில் ஜனாதிபதி 85 வீத வாக்குகளை பெறுவார்! எஸ்.பி.திசாநாயக்க

Share

நுவரெலியாவில் ஜனாதிபதி 85 வீத வாக்குகளை பெறுவார்! எஸ்.பி.திசாநாயக்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா மாவட்டத்தில் 85 வீத வாக்குகளை பெற்றுக்கொள்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வரலாற்று ரீதியான வெற்றியை பதிவு செய்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பாரியளவு வாக்குகளை அவர் பெற்றுக்கொள்வார் என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 11 பேர் தவிர்ந்த ஏனைய அனைவரும் ஜனாதிபதியுடன் இணைந்து இருப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியனவும் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பழனி திகாம்பரத்தின் கட்சி இரண்டாக பிளவடைந்து உள்ளதாகவும் அவரது செயற்பாடுகளை பிடிக்காதவர்கள் தம்முடன் பேசி வருவதாகவும் எஸ்.பி. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...