இலங்கைசெய்திகள்

நுவரெலியாவில் ஜனாதிபதி 85 வீத வாக்குகளை பெறுவார்! எஸ்.பி.திசாநாயக்க

27 5
Share

நுவரெலியாவில் ஜனாதிபதி 85 வீத வாக்குகளை பெறுவார்! எஸ்.பி.திசாநாயக்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா மாவட்டத்தில் 85 வீத வாக்குகளை பெற்றுக்கொள்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வரலாற்று ரீதியான வெற்றியை பதிவு செய்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பாரியளவு வாக்குகளை அவர் பெற்றுக்கொள்வார் என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 11 பேர் தவிர்ந்த ஏனைய அனைவரும் ஜனாதிபதியுடன் இணைந்து இருப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியனவும் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பழனி திகாம்பரத்தின் கட்சி இரண்டாக பிளவடைந்து உள்ளதாகவும் அவரது செயற்பாடுகளை பிடிக்காதவர்கள் தம்முடன் பேசி வருவதாகவும் எஸ்.பி. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...