1 9
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கூறும் ரணில் விக்ரமசிங்க

Share

புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கூறும் ரணில் விக்ரமசிங்க

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, தாம் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தப் பயணத்தைத் தொடர்வதா அல்லது வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது பொருளாதார வீழ்ச்சிக்குத் திரும்பும் அபாயத்துக்கு செல்வதா என்பதைத் தீர்மானிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் ஏனைய தலைவர்கள் தங்கள் பொறுப்புகளைத் துறந்துள்ளனர்.

இந்தநிலையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேசத்திற்கு எதிர்காலம் இல்லை என்றும் ரணில் கூறியுள்ளார்.

தாம் வாக்குறுதியளித்தபடி எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், வேலைகளை உருவாக்குதல், வரிச் சுமையைக் குறைத்தல், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் பாரம்பரியம் மற்றும் அமைதி முயற்சிகளைப் பாதுகாத்தல் போன்ற பணிகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...