New Project 3 20
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்; தலதா அத்துகோரள

Share

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமைகள் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீண்டகால அரசியல் அனுபவம் மற்றும் சர்வதேச ரீதியிலான அறிவைக் கொண்டவர். அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதில் அவர் கொண்டுள்ள ஆற்றலை நாட்டின் நன்மைக்காகப் பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய முக்கிய உறுப்பினர்களோ தற்போதைய அரசாங்கத்தில் எந்தவிதமான அமைச்சுப் பதவிகளையோ அல்லது பொறுப்புகளையோ ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இல்லை என்பதைத் தலதா அத்துகோரள தெளிவுபடுத்தினார்.

“தங்களது தலைவரிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு, அனர்த்த நிவாரணப் பணிகளில் அரசாங்கத்திற்குத் தேவையான களமட்ட உதவிகளை வழங்க ஐக்கிய தேசியக் கட்சியினராகிய நாங்களும் தயாராக இருக்கிறோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியான வேறுபாடுகளுக்கு அப்பால், தேசிய அனர்த்தத்தின் போது அனுபவமுள்ள தலைவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது நாட்டுக்குச் சாதகமாக அமையும் என அவர் வலியுறுத்தினார்.

 

 

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...