நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமைகள் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீண்டகால அரசியல் அனுபவம் மற்றும் சர்வதேச ரீதியிலான அறிவைக் கொண்டவர். அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதில் அவர் கொண்டுள்ள ஆற்றலை நாட்டின் நன்மைக்காகப் பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய முக்கிய உறுப்பினர்களோ தற்போதைய அரசாங்கத்தில் எந்தவிதமான அமைச்சுப் பதவிகளையோ அல்லது பொறுப்புகளையோ ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இல்லை என்பதைத் தலதா அத்துகோரள தெளிவுபடுத்தினார்.
“தங்களது தலைவரிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு, அனர்த்த நிவாரணப் பணிகளில் அரசாங்கத்திற்குத் தேவையான களமட்ட உதவிகளை வழங்க ஐக்கிய தேசியக் கட்சியினராகிய நாங்களும் தயாராக இருக்கிறோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அரசியல் ரீதியான வேறுபாடுகளுக்கு அப்பால், தேசிய அனர்த்தத்தின் போது அனுபவமுள்ள தலைவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது நாட்டுக்குச் சாதகமாக அமையும் என அவர் வலியுறுத்தினார்.