220719221359 01 sri lanka president election parliament restricted scaled
இலங்கைசெய்திகள்

ரணிலின் கட்சிப் பக்கம் சாயும் எம்.பிக்கள்

Share

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் சாய்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரையாவது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைத் தக்க வைத்துக்கொள்வதற்கு அவர்களைத் தம்வசம் வைத்துக்கொள்வதற்கு மொட்டுக் கட்சி தயாராகி வருகின்றது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே களமிறங்க வேண்டும் என மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்களான பிரசன்ன ரணதுங்க, ரொஷான் ரணசிங்க, கஞ்சன விஜேசேகர, திலும் அமுனுகம உள்ளிட்டோர் வெளிப்படையாகவே கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மொட்டுக் கட்சி உறுப்பினர் ஒருவரே வேட்பாளர் என மொட்டுக் கட்சி எம்.பிக்கள் சிலர் அறிவித்து வருகின்றனர். இதனால் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

மொட்டுக் கட்சியில் இருந்து வெளியேறி 30 இற்கும் மேற்பட்டோர் சுயாதீனமாகச் செயற்படும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி பக்கமும் குழுவொன்று சென்றுவிட்டால் அடுத்த தேர்தலில் அது தாக்கமாக அமையும் என்பதாலேயே கட்சியின் பலத்தைக் காக்க மொட்டுக் கட்சி தற்போது வியூகம் வகுத்து வருகின்றது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...