அதிகாரப் பகிர்வின் மூலம் சுயநல அரசியல் இறங்கும் ரணில்
இலங்கைசெய்திகள்

அதிகாரப் பகிர்வின் மூலம் சுயநல அரசியல் இறங்கும் ரணில்

Share

அதிகாரப் பகிர்வின் மூலம் சுயநல அரசியல் இறங்கும் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது அதிகாரப் பகிர்வின் மூலமாக தனது சுயநல அரசியலையே முன்னெடுப்பதற்கு தயாராகி வருகின்றார் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கோட்டையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று(14.08.2023) செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது அதிகாரப் பகிர்வின் மூலமாக தனது சுயநல அரசியலையே முன்னெடுப்பதற்கு தயாராகி வருகின்றார்.
அவர் அதிகாரங்களைப் பகிர்வதாகக் கூறி, மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மாகாண சபைகளுக்கு தேர்தலை நடத்தாது தனது தேர்தல் பரப்புரைக்காக ஆளுநர்கள் மற்றும் இதர தரப்பினருக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு முயல்கின்றார்.

ஆகவே இந்தச் செயற்பாடானது அதிகாரத்தினைப் பகிரும் செயற்பாடு அல்ல. அதிகாரத்தினை குவிப்பதாகும்.
அந்த விடயத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். மேலும், அதற்கு நியாயமான பதில் அளிக்கப்பாடாது சர்வகட்சிக் கூட்டத்தினை நடத்துவதில் எவ்வித பயனுமில்லை என்ற முடிவினை நாம் கொண்டுள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...