tamilni 253 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் நானே ஜனாதிபதி

Share

நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் நானே ஜனாதிபதி

நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்கும் தாமே ஜனாதிபதி என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டத்தில் இன்று(21)பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியைப் போன்றே தாம் இந்த நாட்டினதும் தலைவர் எனவும் இந்த இரண்டையும் பிரித்து கையாள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தம்மை வெளியேற்றும் நோக்கில் தமது வீட்டுக்கு தீ மூட்டிய போதிலும் தாம் அவ்வாறு விலகவில்லை எனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் அவ்வாறு விலகிச் செல்ல மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராஜபக்சக்களை பாதுகாக்க பதவி ஏற்றுக்கொண்டதாக விமர்சனம் செய்த போதிலும் தாம் நாட்டு மக்களையும் பொருளாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்ள பதவியை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

போராட்டம் நடைபெற்ற காலத்தில் அரசாங்கத்தின் கையிருப்பில் இருந்த டொலர்களை விடவும் தம்மிடம் கூடுதலான தொகையாக 200 டொலர்கள் இருந்தது எனவும், மாற்றத்தை மற்றவர்களிடமிருந்து ஆரம்பிக்காது தம்மிடமிருந்து ஆரம்பித்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலே 21ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...