tamilni 253 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் நானே ஜனாதிபதி

Share

நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் நானே ஜனாதிபதி

நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்கும் தாமே ஜனாதிபதி என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டத்தில் இன்று(21)பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியைப் போன்றே தாம் இந்த நாட்டினதும் தலைவர் எனவும் இந்த இரண்டையும் பிரித்து கையாள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தம்மை வெளியேற்றும் நோக்கில் தமது வீட்டுக்கு தீ மூட்டிய போதிலும் தாம் அவ்வாறு விலகவில்லை எனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் அவ்வாறு விலகிச் செல்ல மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராஜபக்சக்களை பாதுகாக்க பதவி ஏற்றுக்கொண்டதாக விமர்சனம் செய்த போதிலும் தாம் நாட்டு மக்களையும் பொருளாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்ள பதவியை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

போராட்டம் நடைபெற்ற காலத்தில் அரசாங்கத்தின் கையிருப்பில் இருந்த டொலர்களை விடவும் தம்மிடம் கூடுதலான தொகையாக 200 டொலர்கள் இருந்தது எனவும், மாற்றத்தை மற்றவர்களிடமிருந்து ஆரம்பிக்காது தம்மிடமிருந்து ஆரம்பித்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலே 21ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...