16 3
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி ரணிலுக்கு தொடரும் சோகம் – ஹோட்டலுக்குள் திடீரென புகுந்த அதிகாரிகள்

Share

ஜனாதிபதி ரணிலுக்கு தொடரும் சோகம் – ஹோட்டலுக்குள் திடீரென புகுந்த அதிகாரிகள்

சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட மக்கள் கூட்டம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பன்வில பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, கண்டி தேர்தல் செயலக அதிகாரிகள் குழுவொன்று அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேலுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்பதற்கு தயாராகியுள்ளனர்.

அதிகாரிகள் சுற்றிவளைத்த போது ஹோட்டலில் சுமார் 150 பேர் கூடியிருந்தனர். மேலும் தேர்தல் அதிகாரிகளால் அவர்களுக்காக தயாரிக்கப்பட்ட அனைத்து உணவு கைப்பற்றப்பட்டு அவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்களுக்கு உணவு மற்றும் மதுபானம் வழங்குவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

விதிமுறைகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால், தேர்தல் அலுவலகத்திற்கு அறிவிக்குமாறு கண்டி தேர்தல் அலுவலகம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதியுடன் அனைத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் நிறைவுக்கு வருகிறது.

சில தினங்களுக்கு முன்னர் மஹரகம பகுதியில் இளைஞர்கள் மத்தியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போதும் இவ்வாறு அதிகாரிகள் புகுந்த அதனை இடைநிறுத்தியிருந்தனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...

Untitled 58
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எரிபொருள் மானியத்திற்குத் தடையுமில்லை: இலங்கையில் தற்போதைய விலையிலேயே விநியோகம் தொடரும்!

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருள் விலை மானியத்தை முன்னெடுத்துச் செல்வதற்குச் சர்வதேச நாணய நிதியம் (IMF)...