24 664119b766625
இலங்கைசெய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய வந்தவர்களை தடுத்த ரணில்

Share

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய வந்தவர்களை தடுத்த ரணில்

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது தொடர்பான நகர்வை, கட்சியின் தலைவர் சிறிது காலத்துக்கு தாமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த உறுப்பினர்கள் கடந்த மே தினத்தன்று, ஐக்கிய தேசியக் கட்சியின் மேடையில் ஏற, ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

எனினும் அதனை தடுத்து நிறுத்திய ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து கட்சிகளின் பொது வேட்பாளராக தன்னை அறிவித்த பின்னரே அத்தகைய நகர்வு இடம்பெறவேண்டும் என்று கூறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறுவோருக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்ற அச்சம் காரணமாவே கட்சி தாவல் மேற்கொள்வோரின் சரியான எண்ணிக்கை இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினத்தில் பங்கேற்காத ராஜித சேனாரட்ன, தலதா அத்துகோரள போன்றோரே ரணிலுடன் இணையவுள்ளதாக பேச்சுக்கள் உலாவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...