24 6689375d6a9e9
அரசியல்இலங்கைசெய்திகள்

தேசத்தின் தலைவிதியை தேர்தலில் மக்களே தீர்மானிக்க வேண்டும்: ரணில் 

Share

தேசத்தின் தலைவிதியை தேர்தலில் மக்களே தீர்மானிக்க வேண்டும்: ரணில்

தேர்தல் ஆணையம் விரைவில் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கவுள்ள நிலையில் தேசத்தின் தலைவிதியை மக்களே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் காலி (Galle) மாவட்ட மாநாட்டில் இன்று (06.07.2024) கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ”பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையின் பாதையில் கொண்டு செல்லும் எனது பணியை முடித்து விட்டதால் இனி தேசத்தின் எதிர்காலம், மக்கள் கையிலேயே உள்ளது.

எவரும் தயாராக இல்லாத போதே, நான் தேசத்தை பொறுப்பேற்க வேண்டியிருந்தது. அப்போது ஜே.வி.பி.யைக் காணவில்லை. மற்றவர்களும் காணாமல் போனார்கள்.

எனினும், நான் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடனடியாக பேச்சுக்களை ஆரம்பித்து, நடவடிக்கைகளை மேற்கொண்டதிலேயே இன்று நாடு ஸ்திரதன்மையை அடைந்து கொண்டிருக்கிறது.

அத்துடன், தேசம் தற்போதைய பாதையில் செல்ல வேண்டுமா அல்லது வேறு வழியில் செல்ல வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

அது மாத்திரமன்றி, எமது சித்தாந்தத்தை, முன்னரே ஏற்று கொண்டிருந்தால் நாடு, இன்று நெருக்கடிக்கு உள்ளாகியிருக்காது.

இதற்கிடையில், ஐக்கிய தேசியக் கட்சியினர் வேறு வழியில் சென்று புதிய கட்சியை உருவாக்கியுள்ளனர். எனவே, தற்போது கட்சி அரசியலை மறக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

ஆகையால், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும், மீண்டும் இணைந்து கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...