10 8
இலங்கைசெய்திகள்

உலக வரலாற்றில் சாதனை படைத்த ரணில்: ராஜித பெருமிதம்

Share

உலக வரலாற்றில் சாதனை படைத்த ரணில்: ராஜித பெருமிதம்

ஒன்றரை வருடத்தில் உலகில் எந்த நாடும் வங்குரோத்து நிலையிலிருந்து மீளவில்லை என்றும், உலக வரலாற்றில் அந்த சாதனையை படைத்த ஒரேயொரு தலைவராக ரணில் விக்ரமசிங்க கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இயலும் ஸ்ரீலங்கா பேரணியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“உலக வரலாற்றில் எந்த ஒரு நாடும் ஒன்றரை வருடத்தில் திவால் நிலையில் இருந்து வெளியே வரவில்லை.

அதனால்தான் ஒன்றரை வருட உலக வரலாற்றில் திவாலான நாட்டை மீட்ட தலைவர் என்று சாதனை புத்தகத்தில் ரணில் விக்ரமசிங்க எழுதப்பட்டுள்ளார்.

இது பொருளாதாரத்தின் அதிசயம். உலகத் தலைவர்கள் இந்த பொருளாதாரத்தை அப்படித்தான் பார்க்கிறார்கள்.

இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு, எத்தியோப்பியா திவாலானது. ஐஎம்எப் என்ன சொன்னது?

அது இயலும் ஸ்ரீலங்கா என்று அழைக்கப்பட்டது. தற்போது ஸ்ரீலங்கா விக்ரமசிங்க என்று அழைக்கப்படடுகிறது” என்றார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...