1 28
இலங்கைசெய்திகள்

அநுர அரசை விடாது துரத்தும் ரணில்: சவாலுடன் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Share

அநுர அரசை விடாது துரத்தும் ரணில்: சவாலுடன் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தாம் அறிமுகப்படுத்திய பாதையில் செல்லாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தை கையாள முடியாது என அநுர அரசாங்கத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எச்சரித்துள்ளார்.

கொழும்பு (Colombo) மருதானையில் நேற்று (11) இடம்பெற்ற இறுதி மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது, “இந்த நாட்டில் உள்ள அனைத்து வரிசைகளையும் நாங்கள் நிறுத்தினோம். சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து கடன்களையும் நிர்வகித்தோம்.

2028க்குள் கடனை அடைக்கத் தொடங்க வேண்டும். 2042 வரை அவகாசம் உள்ளது. கடனை கட்டவில்லையென்றால் மீண்டும் வரிசை உருவாகும் காலத்துக்கு செல்ல வேண்டும்.

பொருளாதார தொலைநோக்கு பார்வையை ஜனாதிபதி இதுவரை சொல்லவில்லை. பெரும் நிச்சயமற்ற நிலை உள்ளது.

இப்போது அரிசி கிடைக்கவில்லை. தென்னை மரத்தை விட தேங்காய் விலை உயர்ந்துள்ளது, பொருட்களின் விலை தாமரை கோபுரம் போல் உயர்ந்து வருகிறது. முட்டை விலை அதிகரித்து வருகிறது.இவற்றை அரசால் தீர்க்க முடியுமா?

இந்த அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்துகிறது? பணக்கார நாடு, அழகான வாழ்க்கை என்ற விஞ்ஞாபனம் ஜனாதிபதித் தேர்தலில் கொண்டு வரப்பட்டது. அவற்றை இப்போது செயல்படுத்த முடியுமா?

கொழும்பு மற்றும் வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசப்பட்டது. இப்போது மூன்றாவது தவணை எடுப்பது பற்றி ஆலோசிக்கிறீர்களா?

ஜனாதிபதி தேர்தலின் போது வரிச்சலுகை வழங்குவதாக திசைக்காட்டி கூறியது. அவை கிடைக்குமா? இல்லையா? அறிக்கை வெளியிடுங்கள்” என்றார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...